மண்முனைப் பற்றில் நடைபெற்ற பொங்கல் விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் வயல் அறுவடை பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்

பிரதேச செயலக கிளை ரீதியாக பல வகையான பொங்கல் பானைகளால் நிகழ்வை அலங்கரித்தமை ஒரு சிறப்பம்சமாகும்.

இதன்போது ஆன்மீக மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு மகேந்திரராசா ரஜீவன் அவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மனோரஞ்சனி ஜெயச்சந்திரன், கணக்காளர் வல்லிபுரம் நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் சின்னத்துரை திவாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து மாவிலங் கன்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள், உடுக்கு இசை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உழவர் பாடல், கிராமிய பாடல், என பல கலை நிகழ்வுகளும் பொங்கல் விழாவை சிறப்பித்ததிருந்தன.
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை பகுதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகம், முதியோர் சங்கம், மீனவர் சங்கம், ஹெயார் நுன்நிதிச் சங்கம் என பல அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :