06 தொடக்கம் 09 மாத குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 06 தொடக்கம் 09 மாத (வயதுடைய) குழந்தைகளுக்காக மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வேலைத்திட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஷீர் அவர்களின் தலைமையில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று (06) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாளிகைக்காடு சுகாதார நிலையம் மற்றும் மாவடிப்பள்ளி சுகாதார நிலையம் ஆகிய மூன்று நிலையத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் கலந்துகொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தார். மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தாதிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :