வட்டுக்கோட்டை இந்துவில் சாதனை மாணவிகளும், பயிற்சி ஆசிரியையும் கெளரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
தேசிய ரீதியில் நடைபெற்ற தேயிலை கொழுந்து கொய்யும் மலையக நடனத்தில் முதலிடம் பெற்ற வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, தேவாரம் இசைக்கப்பட்டு வரவேற்புரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற நடனம் என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து குறித்த நடனத்தினை பயிற்றுவித்த நடன ஆசிரியர் திருமதி. சகிலா சுதாகரன், சங்கீத ஆசிரியர் திருமதி. நித்தியா தவக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினாலும் நடன ஆசிரியராலும் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வர் திரு. லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி. சுபத்திரா கந்தகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக பழைய மாணவன் திரு. அ.சிவானந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :