கல்முனை கல்வி கோட்டத்தில் வகுப்பறை கவின்நிலைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு




எம்.எம்.றம்ஸீன்-
ல்முனை கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை களின் தரம் 3 மற்றும் தரம் 4 வகுப்புகளின் கவின்நிலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் தலைமையில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியாழ் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் முறையான கலைத்திட்ட முகாமைத்துவ செயற்பாடுகள் ,மாணவர்களின் மனவெழுச்சி செயற்பாடுகள்.புத்தாக்க சிந்தனைகள், கற்றல் கற்பித்தல் செயன்முறையில் நவீன தகவல் சார் தொழில்நுட்ப சாதனங்களின் பிரயோகம் , பெற்றோர் தரவட்ட பங்களிப்பு, பொலித்தீன் அற்ற வகுப்பறை கழிவு முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாக உயிரோட்டமானதும் , செயற்பாடுகளுடனான புலன் சார்ந்த மறைமுக கற்றல் மாணவர்களிடத்தில் உருவாகின்ற" என்னுடைய அழகான வகுப்பறை "என்ற எண்ணக்கரு அடிப்படையில் இந்த கவின்நிலைப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற தரம் -3,4 வகுப்பாசிரியர்களுக்கு சான்றிதழ்களும்,கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :