மாத்தறை றாகுல கல்லூரியில் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு.


எம்.ஏ.ஏ.அக்தர்-

மாத்தறை றாகுல கல்லூரியிலிருந்து அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான முடிவுகளின் அடிப்படையில்  மாத்தறை மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. 

பெளதீக விஞ்ஞான பிரிவு (  கணிதம்) மாவட்டதாதில் முதலாம்,இரண்டாம் நிலை,  தேசிய மட்டத்தில் இரண்டாவது,பதினெட்டாவது நிலை, பொறியியல் தொழில்நுட்ப பிரிவு , மாவட்டத்தில் முதலாவது நிலை, தேசிய மட்டத்தில் பதினான்காம் நிலை, கலைப்பிரிவு மாவட்டத்தில் முதலாவது நிலை, தேசிய  மட்டத்தில் பதினாறாவது நிலைகளையும் இக் கல்லூரி மாணவர்கள் பெற்றிருந்தனர். 

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :