கல்முனையில் சமூக செயற்பாட்டு சான்றிதழ் கற்கைநெறி!



காரைதீவு சகா-
ம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த மூன்று மாத கால சமூகசெயற்பாடு சான்றிதழ் கற்கைநெறி பிரதி சனிஞாயிறு தினங்களில் கிரமமாக நடைபெற்று வருகிறது.

இதன் அங்குரார்ப்பண வைபவம் கடந்த (22) சனிக்கிழமை பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி தியாகேஸ்வரி ரூபன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வலையமைப்பின் பொதுச்சபை இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரனின் ஒழுங்கமைப்பில் வகுப்புகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று ஞாயிறு முழு நேர செயலமர்வை சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நடாத்தியிருந்தார்.

ஊடகம் மற்றும் சமூக வலைத் தளங்களின் தாக்கம் தொடர்பாக அவரது முன்வைப்பு அமைந்திருந்தது.

வலையமைப்பின் செயற்பாட்டு இடம் பெறும் மாவட்டத்தின் ஆறு பிரதேசங்களில் இருந்து நாற்பது யுவதிகள் இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :