திருக்கோவில் தீர்த்தோற்சவத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி! செய்தியாளர் மாநாட்டில் ஆலயதலைவர் சுரேஸ்



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் நேற்று திங்கட்கிழமை மாலை ஆலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அருகில் பதில் செயலாளர் எஸ்.சதீஸ்குமார் கணக்குப்பிள்ளை எஸ். லோகிதராஜா ஆகியோர் இருந்தனர்.

அங்கு ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மேலும் தெரிவிக்கையில்..
போக்குவரத்து மின்சாரம் சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் தீர்த்த ஒழுங்கு சகல ஏற்பாடுகளையும் முறையாக செய்துள்ளோம்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் குருக்கள் மற்றும் பிரதம குரு சிவஸ்ரீ திருக்குமரக் குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்களின் ஒத்துழைப்புடன் தினமும் பகல் இரவு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.

பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்துடன் சொற்பொழிவுகளும் அன்னதானமும் இடம்பெற்று வந்தன.
கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் உற்சவம் நாளை 16ஆம் தேதி புதன்கிழமை தீர்த்தோற்சவம் இடம் பெற இருக்கின்றது.என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :