சித்த மருத்துவ பீட அங்குரார்ப்பண நிகழ்வு!



அபு அலா-
திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, அதை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு (18) திருமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் ச.தேவதாசன், கிழக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், சித்த மருத்துவ பீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சோ.சுதர்சன் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சித்த மருத்துவத்தின் தந்தையாக இருக்கின்ற அகஸ்த்திய முனிவரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, சர்வமத அனுஷ்டானங்களுடன் சித்த மருத்துவ பீடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இதன்போது, சித்த மருத்துவத்தின் தோற்றம் பற்றியும், திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, அதன் வளர்ச்சிப்படிகள் என்ன? இன்று பீடமாக தரமுயரக் காரணமானவர்கள் யார் என்பது பற்றியும் அதிதிகளினால் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :