தரம் 01க்கான செயல்பாட்டு மைய வாய்மொழி ஆங்கில அங்குரார்ப்பண நிகழ்வு



காரைதீவு சகா-
தேசிய ரீதியிலான தரம் 1 மாணவர்களுக்கான செயல்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் அங்குரார்ப்பண நிகழ்வு நாவிதன்வெளி அன்னமலை
மகா வித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

மாணவர்களுக்கான நவீன வகுப்பறையில் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான ஆங்கில பாடம் கற்பித்தல் ஸ்மார்ட் டிவி மூலம் ஆங்கில ஆசிரியை திருமதி எஸ்.ஹரிப்பிரியாவால் நடாத்தப்பட்டது.

அதிபரின் ஆரம்ப உரையை தொடர்ந்து உதவிக் கல்வி பணிப்பாளரின் உரை இடம்பெற்றது.

பிரதி அதிபர் ந.வன்னியசிங்கம் ஆசிரியர்களான திருமதி எம்.ஆர்.குமாரராசா, திருமதி விஜயபிருந்தா பிரதீபன், திருமதி வி. சிவப்பிரியா, என்.கோடீஸ்வரன் மற்றும் தரம் 1 மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :