காரைதீவுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய ஆழ்கடல் படகு விபத்து



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு இன்று (2) வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.

காரைதீவைச் சேர்ந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பாரியப்படகே இவ்விதம் கடலில் சேதத்திற்குள்ளாகியது. சேதம் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக இன்னும் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான படகு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .இதனை அறிந்த படகு உரிமையாளர் மற்றும் காரைதீவு கடற்படையினர் இணைந்து படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .

அதை வேளையில் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்த ஒரு தொகுதி வலை மற்றும் ஒரு படகால் கட்டியிழுத்து வரப்பட்டு ஜேசிபி கனரக வாகன உதவியுடன் கரைக்கு நண்பகல் அளவில் கொண்டு வரப்பட்டது.

விபத்து தொடர்பாக காரைதீவு போலீசிலும் கடற்றொழில் அலுவலகத்திலும் முறையிடப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :