2023 ஆம் ஆண்டுக்காக, சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ். வித்தியாலயத்துக்கு முதலாம் ஆண்டுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட, ஒரு தொகுதி புதிய மாணவர்கள் இன்று (2023.03.07) பாடசாலைக்கு வருகை தந்து, தங்களது சக மாணவர்கள், அதிபர், உபஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து அளவளாவி, துள்ளிக்குதித்து விளையாடி, படித்து மகிழ்ந்த நிகழ்வொன்று இடம்பெற்றது.
மாணவர்களை பாடசாலை சூழலுடன் இணைக்கும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் இன்று இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிதாக வருகை தந்த மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த விளையாட்டுப் பொருட்களை, ஏனைய மாணவர்களுடன் இணைந்து விளையாடி, துள்ளிக்குதித்து ஆடிப்பாடி குதூகலித்து தாங்களது திறமைகளைச் காட்டிச் சென்றனர்.
நிகழ்வின்போது அதிபர் எம்.ஐ.எம் இல்லியாஸ், பிரதி அதிபர் திருமதி குறைசியா ராபிக், உதவி அதிபர் அல்-ஹாஜ் எம்.ஏ.சி.எல் நஜீம் மற்றும் வகுப்புகளுக்கு பொறுப்பான ஆசிரியைகள் ஏனைய ஆசிரியர் ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment