கந்தளாயில் வீடொன்றினுள் புதையல் தோண்டிய மூவர் கைது.




எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை ஜன சவி மாவத்தை பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (04) கைது செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் அடிப்பாகத்தில் பதினைந்து அடி வரை தோண்டிக் கொண்டியிருந்த போது மூவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

தோண்டிய இடத்தில் மூன்று அலவாங்கு ஒரு மண்வெட்டி ஒரு சுத்தியல் ஒரு பிளாஸ்டிக் வாளி,கயிறு, நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மல்டி வயரும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :