இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பாவனையை தடுக்க பூப்பந்தாட்ட பயிற்சி முகாம்.



நூருள் ஹுதா உமர்-
ளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் துறையூர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடதொகுதி பூப்பந்தாட்ட அரங்கில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றது.
துறையூர் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.டி.எம்.றிஸா தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் ECDO அமைப்பின் தலைவர் அஸ்மி யாஸின் , மாவட்ட பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பீ.வசந்த், சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்சன், பயிற்றுவிப்பாளர் ஏ.றியாஸ், துறையூர் விளையாட்டு கழக பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :