மருதமுனை சீபா இப்றாஹீம் எழுதிய 'இஸ்லாமி உளவளத் துணையும் கிழக்கிலங்கையும்' நூல் வெளியீட்டு விழா



கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை,பெரியநீலாவணை சீபா இப்றாஹீம் எழுதிய 'இஸ்லாமி உளவளத் துணையும் கிழக்கிலங்கையும்' நூல் வெளியீட்டு விழா நாளை(05-02-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட், தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எம்.எப். ஹிபத்துல்; கரீம் கலந்து சிறப்பிக்வுள்ளார்.

சிறப்பு அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட்,அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுள்ளாஹ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட்.ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஜெசீலா உதுமாலெப்பை ஆகியேரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :