சமாதானமும் சமூகப்பணியினால் நல்லிணக்கத்திற்காக சிவில் சமூக தலைமைத்துமிக்க பெண்களை அடையாளப்படுத்தி வழுவூட்டும் நிகழ்வு..!



எம்.என்.எம்.அப்ராஸ்-
மாதானமும் சமூகப்பணி நிறுவனமானது (PCA)சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்க்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்ப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கல்முனை பிரதேசத்தில் நல்லிணக்கத்திற்காக சிவில்,சமூக தலைமைத்து வமிக்க பெண்களை அடையாளப்படுத்தி வழுவூட்டும் நிகழ்வு கல்முனையில் நேற்று(24) இடம்பெற்றது.

சிவில் சமூக அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் தங்களின் வகிபாகம் எவ்வாறு காணப்பட்டது ?தற்க்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு காணப்பட வேண்டும் என்ற விடயமும் கல்முனை பிரதேசத்தில் நல்லிணக் கத்திற்க்கு சவாலாக காணப்படுகின்ற விடயங்களை அடையாளம் கண்டு எவ்வாறு எதிர்காலத்தில் அவற்றிக்கான சமூக முன்னெடுப்புக்கள் மேற்க்கொள்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது .

கல்முனை பிரதேச நல்லிணக்கக்குழு மற்றும் அம்பாரை மாவட்ட நல்லிணக்ககுழு இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் டி.ராஜேந்திரன்,அரச சார்பாற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம்.
இர்பான்,நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகினி,எம்.எல்.ஏ.மாஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :