எதிர்வரும் ஊராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபை க்கு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் வீட்டுச் சின்னத்தில் களமிறங்கி உள்ளனர்.
தமிழரசுக் கட்சி வேட்பாளர் குழுவில் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், முன்னாள் உதவி தவிசாளர் கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி, மாவடி கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா சின்னத்தம்பி சிவகுமார், ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர் திருமதி தவகுமாரி சிவஞானசீலன் ,சமூக சேவையாளர்களான குணராசா மயூரன், கனகசுந்தரம் லோகநாதன், அழகையா ஜெகநாதன் ஆகியோர் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.
இரண்டாவது பட்டியலில் சீனித்தம்பி நளினி, முருகேசு நேசராணி, புஸ்பநாதன் கல்பனா ,சுப்பையா கணேஷ், கிருஷ்ணவேணு தனுஜியன் ,தங்கராஜா ஜெயவினோதன், நவசேகரம் ஜயந்த் ஆகியோர் இடம் பெறுகின்றார்கள்.
0 comments :
Post a Comment