ஜெர்மனி நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் அருணி வேலழகன் கல்முனையில் செயலமர்வு.


வி.ரி. சகாதேவராஜா-
ஜெர்மனியின் பிரபல நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் அருணி வேலழகன் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் நரம்பியல் உபாதை தொடர்பான செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ( 05.01.2023 - 06.01.2023) இரண்டு நாட்கள் நரம்பியல் உபாதை நோயாளர் முகாமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக ஜெர்மனியின் பிரபல நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் அருணி வேலழகன்
கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது நரம்பியல் உபாதை ஏற்படும் காரணங்கள், இந்நிலைமைகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம், இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்க வேண்டும், என்னென்ன விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் இலகுவான எளிமையான நடைமுறையில் அனைவருக்கும் விளங்கக்கூடிய விதத்தில் Dr.அருணி வேலழகன் ( நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ) அவர்களினால் விளக்கங்கள் மற்றும் செயன்முறைப்பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இச்செயல் முறை விளக்கம் மிகுந்த பிரயோசனமாகவும் அவசியமாகவும் இருந்ததாக கலந்து கொண்டோர் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :