இன்று பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!



வி.ரி. சகாதேவராஜா-
ரச பாடசாலைகள் இன்று (2) திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுகிறது.

இவ்வருட 2022 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (02) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பிக்கும் மூன்றாம் தவணை எதிர்வரும் 20.01.2023 ஆந் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.

க.பொ.த. உயர் தர பரீட்சைக்காக 21.01.2024-19.02.2023 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை 24.03.2023 ஆந் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2022 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் 20.02.2023-21.03.2023 வரை நடைபெறும்.(தமிழ், சிங்கள மொழி பாடசாலை)

2023 ஆம் கல்வி ஆண்டு சகல பாடசாலைகளிலும் 24.03.2023 இல் ஆரம்பித்து 22.12.2023 இல் நிறைவடையும்.
2023 க்கான க.பொ.த.சா/த பரீட்சை பெரும்பாலும் டிசெம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :