இன நல்லுறவை மேம்படுத்துவதற்கு அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க இணைப்பாளர்களுக்கு கலந்துரையாடல்


எம்.என்.எம்.அப்ராஸ்-
ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ்(HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் அம்பாரையில்(29)இடம்பெற்றது.
அம்பாரை மாவட்டத்தில் நிலவுகின்ற நல்லிணக்க முரண்பாடுகளை இனங்கண்டு அதனை குறைப்பதற்கான செயற்ப்பாடுகளை அடையாளப் படுத்துவதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது
இதில் வை-சேன்ச்(y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி
டப்ளியு.எம்.சுரேகா,சமாதான தொண்டர்களான டி.டிலக்சினி,ஜே.சங்கீத்,எல்.சிரோத்,ஏ.எம்.ஹசினி, எம்.எம்.எம்.அஹ்னாப்,உட்பட அம்பாரை மாவட்ட நல்லிணக்க இளைஞர் குழுக்களின் பிரதேச இணைப்பாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :