மக்களின் நலன்கருதியே அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ள. என்கிறார் நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல்.



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
பிரதேசசபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களும் மக்களின் நலன் கருதியே முன்னெடுக்கப்படுமென நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்துள்ளார். 

30.12.2022. வெள்ளிக்கிழமை புளியாவத்தை பகுதியல் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இலவச ஆயூர்வேத வைத்தியசாலை, சிறுவர் பூங்கா,மற்றும் கனனிபிரிவு ஆகியவற்றை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் .இந்த நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் உட்பட நோர்வூட்
பிரதேசசபையின் உபதலைவர், கிஷோகுமார், நோர்வூட் பிரதேசசபையின்
உறுப்பினர்கலான. அலெக்ஸ்சாண்டர், லிகாந்தன், அருன்குமார், அருள்ஞானம், மற்றும் பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் . இளங்கோ, சமுர்தி உத்தியோகத்தர் ஹாரீஸ், நோர்வூட் பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் கருத்தி தெரிவித்த நோர்வூட் பிரதேசசபை தலைவர் ரவி
குழந்தைவேல். நோர்வூட் பிரதேசசபையை எங்களிடம் முதற்கட்டமாக கையளிக்கும் போது பத்து இலட்ச்சம் ருபாய் பணமும் ழூன்று கோடி ருபாய் கடனோடு ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் நோர்வூட் பிரதேசசபையினை இன்று மாற்றியமைத்து மக்களுக்கு சேவைசெய்ய கூடிய ஒரு சபையாக மாற்றியமைக்க்பட்டுள்ளது சாஞ்சிமலை பகுதியில் கானப்பட்ட குடி நீர் பிரச்சினைக்கு நோர்வூட் பிரதேசசபையின் ஊடாகவே தீர்வுகான முடிந்தது. பிரதேசசபைக்கு வருகின்ற வருமானங்களை வைத்து கொண்டே தான் மக்களுக்கான சேவையினை முன்னெடுக்கமுடியும் முன்பு இயங்கப்பட்ட பிரதேசசபையின் ஊடாக புதியாவத்தை நகரில் உள்ள மண்டபம் வாடகைக்கு வழங்கபட்டிருந்தது நாங்கள் நோர்வூட் சபையை கைபற்றிய பின்பு தான் உபதபால் நிலையம் கிராம உத்தியோகத்தருக்கான காரியாலயம் சமுர்தி உத்தியோகத்தருக்கான காரியாலம் எனபவற்றை பெற்று கொடுத்துள்ளோம் வீதியையும் வடிகான் அமைப்புகளை மாத்திரம்
எதிர்பாரத்து கொண்டு இருக்க கூடாது எந்த விடயத்தினை மக்களுக்கு இலகுவாக கொண்டு முடிவதுதான் ஒரு மக்கள் பிரதி நிதியின் சேவையாகும் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :