மூதூரில் பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பும்



அஸ்ஹர் இப்றாஹிம்-
மூதூர் பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் இன்று இவ்வாண்டுக்கான பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பி.முபாரக் அவர்களின் தலைமையில் சம்பூர் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம்.ஜயவிக்ரம பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அரூஸ், பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபலரத்தினம், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், சுகாதார வைத்திய அதிகாரி, வலய கல்வி பணிப்பாளர், வைத்தியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக கலை இலக்கிய மலர் "முத்து - மலர் 4" வெளியீடு செய்யப்பட்டதோடு மூதூர் பிரதேசத்தை சார்ந்த 41 கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :