தகவலறியும் சட்டத்தை உரிய முறையில் ஊடகவியலாளர்கள் பயன் படுத்த வேண்டும். என்.எம்.அமீன்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கவலறியும் சட்டத்தை உரிய முறையில் ஊடகவியலாளர்கள் பயன் படுத்த வேண்டும் என முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கா பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) போரத்தின் தலைவி புர்ஹாபீ இஸ்திகார் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது மாவட்ட இணைப்பாளர்களுக்கு தகவலறியும் சட்டம் தொடர்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் பைரூசினால் விளக்கம் அளிக்கப்பட்ட போதே என்.எம்.அமீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தும்போது அதனை தடுக்கும் வகையில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு இந்த தகவலறியும் சட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த சட்டம் மூலம் ஒருசில ஊடகவியலாளர்கள் பல தவறுகளை சுட்டிக்காட்டி அந்த விடயங்களை வெளிக் கொண்டு வந்து தடுத்து நாட்டுக்கு நல்ல சேவைகள் செய்துள்ளனர். எனவே ஊடகவியலாளர்கள் இவ்வாறான விடயங்களிலும் அந்த சட்டத்திற்கு அமைவாக கவனம் செலுத்தி செய்திகளை வெளியிடலாம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :