காரைதீவில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 97வது ஜனனதின விழா!



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு சத்யசாயி நிலையத்தின் ஏற்பாட்டில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 97வது ஜனன தின விழா இன்று (23) புதன்கிழமை நிலையத் தலைவர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

ஜனன தின விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 04.45 மணிமுதல் ஒங்காரம், சுப்ரபாதம், நவரத்தினமாலை என்பன பாடப்பட்டு காலை 7 மணியளவில் தேரோடும் வீதி வழியாக ஊர்வலம் இடம்பெற்றது.

வீதி ஊர்வலத்தில் சாயி பக்தைகளான திருமதி பராபரம் துளசி ரஞ்சன், திருமதி புவனேஸ்வரி ஜெயகணேஷ், செல்வி முகூர்த்தனா ரவீந்திரன் ஆகியோர் நகர சங்கீர்த்தன பஜனை பாடினர்.

ஊர்வலம் முடிவில் பிரசாந்திக் கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது..

அதனைத் தொடர்ந்து ஓம்காரம், பஜனை, சிறப்புப் பேச்சு, சாயி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :