2021 ம் ஆண்டிற்கான இலக்கிய வித்தகர் விருது பெற்ற சம்மாந்துறை மஷூறா.



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்குமாகாண கலாசார திணைக்களத்தின் 2021 ம்ஆண்டிற்கான இலக்கிய வித்தகர் விருதினை சம்மாந்துறை மஷூறா பெற்றுள்ளார்.

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமா
கவும் கொண்ட வர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன்.1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் பல சஞ்சிகைகளிலும் எழுதியவர்.தற்போ
து பல மின் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார்.sithy mashoora suhurudeen என்ற தனது முகநூல் பக்கத்திலும் தனது படைப்புகளை பதிவேற்றி வருகிறார்.

கவிதை, சிறுகதை ,கட்டுரை, நாடகம் பாடல், வில்லுப்பாடல் ,தாளலயம் பேச்சு, சித்திரம், கைப்பணி ,சஞ்சிகை என பல் துறைகளிலும் தேர்ந்தவராவார்.
மாவடிப்பள்ளி கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரியும் இவர், மொழித் தேர்ச்சியிலும் படைப்பாக்கத்திறனிலும் மாணவர்களை சிறந்த அடைவைப் பெறச்செய்தவர்.
2017ல் கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய "கலைஞர் சுவதம்"விருது உட்பட இலக்கியத்திற்காக பதின்மூன்று விருதுகள் பெற்றிரு
க்கிறார்.இலங்கை இந்தியா உட்பட பத்து கவிதைத் தொகுதிக
ளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. கடந்த வருடம்(2021)ல்
நதிகளின் தேசியகீதம் எனும் இவரது சுயகவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது.தவிர அறுபத்து மூன்று முஸ்லீம் பெண்களின் கவிதை
களைத் தொகுத்து "சுட்டுவிரல்"எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார்.
இதுவே இலங்கையில் முஸ்லீம் பெண்களின் முதலாவது கவிதைத் தொகுதியுமாகும்.அச்சு,றோணியோ,கையழுத்து என முப்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளை வெளியிட்டிருக்கிறார்.கையெழுத்தாக ஆரம்பித்து றோணியோவில் முடிவுற்ற"நிறைமதி"சஞ்சிகை எண்பது காலப் பகுதிகளில் தேசியமட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆக்கமாகும்.காலாண்டு சஞ்சிகையான "நிறைமதி"இருபத்தி இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தது.
இவரால் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவரும் Sri Lanka pen club ஆற்றலுள்ள பெண்களுக்கு களம் அமைக்கும் பணியைச் செய்து வருகிறது.கடந்த வருடமும் இவ்வமைப்பின்மூலம் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களுக்கான தேசிய மகாநாடு ஒன்றினையும் நடாத்தியிருந்தார்.இவ்வமைப்பின் மூலம் "அவரி"என்ற மின் சஞ்சிகையொன்றினையும் வெளியிட்டு வருகிறார்.
தனது மாணாக்கர்களின் கவிதைகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகள் ரோணியோவில் வெளியிட்டிருக்கிறார்.மாணவர்களை வழிநடத்தி வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள் நான்கு தடவைகள் மாகாணமட்டத்தில் வெற்றியீட்டியிருக்கின்றன.கலாசார அலுவல்கள் அமைச்சின் வெளியீடான வாழ்வோரை வாழ்த்து
வோம்,அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் வரலாறு மற்றும் இலங்கை தமிழிலக்கிய வளர்ச்சி போன்ற நூல்களுட்பட பதினைந்திற்கு மேற்பட்ட களங்களில் இவர் பற்றிய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
பாடலாக்கம்,கவிதை,சிறுகதை ,நாடகத்தயாரிப்பு என தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.இவரது பன்னிரெண்டு நாடகங்கள் மாவட்டம் ,மாகாணம்;தேசியமட்டம் என வெற்றிகளையீட்டியுள்ளன.தேசிய மட்டத்தில்மூன்று நாடகங்கள்(பள்ளி நாடகங்கள்) வெற்றியீட்டியுள்ளன. தேசிய மட்டத்தில் நாடகத் தயாரிப்பிற்கான விருதும் பெற்றுள்ளார்.
வீரகேசரி ,தினக்குரல், பிறைவானொலி,ஊவா வானொலி வெற்றி வானொலி ,ரூபவாஹினி போன்றவற்றில் இவர் செவ்விகள் காணப்பட்டுள்
ளார்.பல்வேறு இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்து பணியாற்றி வரும்
இவர் அகில இலங்கை சமாதான நீதிவானுமாவார்.கிழக்குமாகாண கலாசார திணைக்களத்தின்
2021 ம்ஆண்டிற்கான இலக்கிய வித்தகர் விருதினை பெற்றுள்ளார்.
கடந்த 18.11.2022 ல் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினரான கிழக்குமாகாண ஆளுநர்கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களின் கரங்களால் விருது பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :