கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு இன்று(15) சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இந்தியாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது.
பிசினஸ் குளோபல் இன்டர்நேஷனல்( Business Global International Conference and awards ceremony) என்கின்ற அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த பாராட்டு விழாவில் ஆசியாவின் பல பாகங்களிலும் இருந்து சமூக சேவை ஊடாக கல்வி சுகாதார மற்றும் பல துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது .
இந்தியா சென்னையிலுள்ள சஃபாரி கிறான்ற் விடுதியில் BGIA Awards வைபவம் நடைபெறுகிறது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் சமூக, கல்வி சேவைக்காக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு இந்த "வாழ்நாள் சாதனையாளர் "விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து கிழக்கு மாகாண கல்வி செயலாளர் திசாநாயக்க உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து விருது பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment