வாழைச்சேனை ஆயிஷா ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர்களை ஊர்வலமாக அழைத்து கௌரவித்த நிகழ்வு (13) இடம்பெற்றது.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஸா கலந்து கொண்டார்.
அத்துடன், ஏனைய அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் யூ.அஹமட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர்களான ஏ.எம்.நியாஸ், எம்.எம்.அன்வர் சாதாத், எம்.எப்.பனூஸ், எஸ்.எச்.இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ஆசிரியர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :