வாழைச்சேனை ஆயிஷாவில் விஞ்ஞான ஆய்வுகூட கண்காட்சி



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கண்காட்சியொன்று இன்று (6) இடம்பெற்றது.

மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சி கூடத்தை பாடசாலை மாணவிகள் பார்வையிட்டு பயன்பெற்றனர்.
பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சி கூட நிகழ்வில், பகுதித் தலைவர்களான எஸ்.பாறூக் கான், கே.ஆர்.எம்.இர்ஷாத், எம்.எல்.எம்.முஸம்மில் உட்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர்.

மாணவிகளின் நலன் கருதி குறித்த கண்காட்சியை ஏற்பாடு செய்த விஞ்ஞான பாட ஆசிரியைகளான கே.ஆர்.எப்.இஷாரா, திருமதி எப்.எப்.முனாஸ்தீன், என்.ஆயிஷா சுல்பா ஆகியோருக்கு அதிபர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :