சம்மாந்துறையில் இளைஞர் மன்றம்.



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் திறன் விருத்தி மற்றும் சமூகமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவின் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

எதிர்காலத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவுடன் இளைஞர்களையும் இனணத்து திறன் விருத்தி மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் பங்களிப்பை சம்மாந்துறை பிரதேசத்தில் வழங்கி இளைஞர் சார் செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் சமூக ஆர்வலர்களை உருவாக்குவதே நோக்கமாகும்.

இக்கூட்டத்தில் GAFSO நிறுவன திட்டப்பணிப்பாளர் ஏ.ஜி.காமில் இம்தாத், பிரதேச செயலக அலுவலகர்கள் மற்றும் ஏனைய இளைஞர்துறை சார் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :