வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கணித பாட பயிற்சி முகாமொன்று திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொதுக் கல்வியை நவீயினப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி முகாம் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் வழிகாட்டலில் பகுதித் தலைவர் கே.ஆர்.எம்.இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மாகா வித்தியாலய மற்றும் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், வளவாளர்களாக பொலன்னறுவை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.நிலாப்தீன், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலை ஆசிரியர்களான எம்.எல்.எம்.உவைஸ், ஐ.எம்.அஸ்மின், ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய ஆசிரியர்களான எம்.பி.எம்.சஜிலூன், ஏ.எல்.எப்.நுஸ்ஹா மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ஆசிரியை என்.ஆயிஷா சுல்பா, நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் எம்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
0 comments :
Post a Comment