சம்மாந்துறை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் நாளை ஆரம்பம்.



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் நாளை 17 ஆம் திகதி சனிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.

தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடைகிறது.

தினமும் பகல் 12 மணிக்கு மதிய பூஜையும் மாலை 6 மணிக்கு இரவு பூஜை யும் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஆலய பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் தலைமையில் சடங்குகள் இடம்பெறும்.
19ஆம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெறும் .

23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வீரகம்பம் வெட்டல் அதனை தொடர்ந்து 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நோன்புக் கட்டல் சடங்கு இடம் பெறும்.

26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஆராதனையும் தீமிதிப்பு வைபவமும் இடம்பெற இருப்பதாக ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார் .
வழமை போல அக்டோபர் 05 ஆம் தேதி கௌரி விரதம் இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :