அரசாங்கத்தினால் நாட்டின் வருமையை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சமுர்த்தி திணைக்களத்தினால் 'சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை' எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டம் 17.09.2022 தொடக்கம் 23.09.2022 வரை பிரகடனப்படுத்தி மரம் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி சிறுவர் பூங்கா, சூடுபத்தினசேனை தின்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் போன்றவற்றில் இன்று (வியாழக்கிழமை) பயன்தரும் மரக்கன்றுகள்; நடப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.தவராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment