பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று (06) காலை சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீல் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மேலும் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.எம். றிசாத், கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் சூஸன் சலீம், கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எம். இசாக், கிராம நிலதாரி, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஆலோசனைக் குழுவினர், பொலிஸார், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டதுடன் பொலிஸாரின் சேவைகள் பற்றிய விசேட உரைகளும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment