பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்!



காரைதீவு சகா-
டந்தவாரம் வெளியான 2021 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்று செப்டம்பர் 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை விஷேட அறிவித்தலாக அறிவித்துள்ளது.

அதற்கு முன்னோடியாக விண்ணப்பிப்பதற்கான மாணவர் கையேடு கடந்த வெள்ளிக்கிழமை(2) வெளியிடப்பட்டது.

சனிக்கிழமை(3) முதல் கையேடுகளை கடைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய தாக இருந்தது.தேவை ஏற்பட்டால் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு கையேடு ஆயிரம் ரூபாய் ஆகும்.

பல்கலைக்கழக விண்ணப்பங்களை இன்று திங்கட்கிழமை முதல் நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியும்.
நிகழ் நிலையாக இன்று முதல் மூன்று வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி செப்டம்பர் 23ஆம் திகதி ஆகும்.

இம்முறை மருத்துவத் துறைக்கு 2035 மாணவர்களும் பொறியியல் துறைக்கு 2238 மாணவர்களும் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :