கடந்தவாரம் வெளியான 2021 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்று செப்டம்பர் 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை விஷேட அறிவித்தலாக அறிவித்துள்ளது.
அதற்கு முன்னோடியாக விண்ணப்பிப்பதற்கான மாணவர் கையேடு கடந்த வெள்ளிக்கிழமை(2) வெளியிடப்பட்டது.
சனிக்கிழமை(3) முதல் கையேடுகளை கடைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய தாக இருந்தது.தேவை ஏற்பட்டால் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு கையேடு ஆயிரம் ரூபாய் ஆகும்.
பல்கலைக்கழக விண்ணப்பங்களை இன்று திங்கட்கிழமை முதல் நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியும்.
நிகழ் நிலையாக இன்று முதல் மூன்று வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி செப்டம்பர் 23ஆம் திகதி ஆகும்.
இம்முறை மருத்துவத் துறைக்கு 2035 மாணவர்களும் பொறியியல் துறைக்கு 2238 மாணவர்களும் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment