வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த முறையில் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சாதனை மாணவர்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில், நேற்று (31) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்து மருத்து பீடத்திற்கு தெரிவான ஏ.அப்ஸர் எனும் மாணவனையும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் வலயக் கல்விப் பணிப்பாளர் நேரில் சென்று தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment