வாழைச்சேனை அந்நூர் சாதனை மாணவர்களை வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா நேரில் சென்று பாராட்டு




எச்.எம்.எம்.பர்ஸான்-
வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த முறையில் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சாதனை மாணவர்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில், நேற்று (31) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்து மருத்து பீடத்திற்கு தெரிவான ஏ.அப்ஸர் எனும் மாணவனையும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் வலயக் கல்விப் பணிப்பாளர் நேரில் சென்று தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :