ஏறாவூர் பிர்தௌஸுக்கு 5 லட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணை!



ஏறாவூர் சாதிக் அகமட்-
டந்த அரசாங்கத்திற்கு எதிரான அசம்பாவிதத்தில் தொடர்புபட்ட சந்தேக நபராக கைது செய்யப்பட்ட மற்றும் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் அவர்களினால் காடையன் என சொல்லப்பட்ட ஏறாவூர் பிர்தௌஸ் அவருக்கு சார்பாக ஏறாவூர் நீதிமன்றம் முன் முன்னிலையானார் சட்டத்தரணி ஹபீப் றிபான்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதற்கு ஆதரவு கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஏறாவூரில் நடாத்தப்பட்ட மக்கள் எழுச்சியில் சந்தேக நபராகளாக ஏறாவூரை சேர்ந்த பல பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகளான ஹபீப் றிபான், அச்சலா செனவிரத்ன மற்றும் றியாஸ் ஆகியோருடன் முன்னிலையான ஏறாவூர் அப்துல் மஜீத் முகமட் பிர்தௌஸ் என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கு இன்று ஏறாவூர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தை தொடர்ந்து பிர்தௌஸ் அவர்களுக்கு 5 லட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கில் சட்டத்தரணி ஹபீப் றிபானுடன் இணைந்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான பிரேம்நாத், அச்சலா செனவிரத்ன, றியாஸ் மற்றும் நபீஸ் ஆகியோர் தோன்றி இருந்தனர்.

ஏறாவூர் பொலிஸார் ஏறாவூரில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக பிர்தௌஸை ஒரு குற்ற நபராக இணைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன் பிர்தௌஸைப் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் அவர்கள் பாராளுமன்றத்தில் "காடையன்" என பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

එරාවුර් අධිකරණයෙන් නැගෙනහිර අරගලයේ ක්‍රියාකාරිකයකු වු මොහොමඩ් ෆිර්දවුස්ට පවරා තිබු නඩු 06 ක් සදහා ඇප අද දින එනම් 2022/09/23 වන දින ලබා දෙන ලදී.


එරාවුර් ප්‍රවෘති වාර්තාකරු - සාදික් අහමඩ්


එසේම එරාවුර් පොලිසිය විසින් එම තරුණයාගේ ලී මෝලේ ලියාපදිංචි අවසරපත මෙතෙක් රදවා ගෙන සිටි අතර එයද ඔහු වෙත මුදාහරින ලෙස එරාවුර් මහේස්ත්‍රාත්වරයා විසින් නියම කරන ලද අතර ,එරාවුර් පොලිසිය විසින් මොහොමඩ් ෆිර්දවුස් හට පොලිස් ස්ථානයට වාර්තා කිරීම සදහා පොලිසිය විසින් ඇප කොන්දේසි පනවන ලෙස මහේස්ත්‍රාත්වරයාගෙන් කරන ලද ඉල්ලීම්ද අධිකරණය ප්‍රතික්ෂේප කරන ලදී.දින 22 ක් රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටී මොහුට විරුද්ධ ඉදිරිපත් කරන ලද චෝදනා වුයේ කැබිනට් අමාත්‍ය නසීර් අහමඩ් ගේ කාර්‍යාලයට ගිනි තැබීම සහ පොදු දේපළ පනත් යටතේ වැරදි සහ මහජන ආරක්ෂණ පනත යටතේ වැරදි කළ බවයි.එහෙත් අද දින වන තෙක් ඒ සම්බන්ධයෙන් ඔහුට එරෙහිව සාධාරණ කරුණු දැක්වීමට පොලිසිය අසමත් වී ඇති බවට ඔහු වෙනුවෙන් පෙනී සිටී නීතිඥවරු අධිකරණයට කරුණු දැක්වීය. නීතිඥ අචලා සෙනෙවිරත්න මෙනෙවිය සමග නීතිඥ හබීබ් රිෆාන්,නීතිඥ ප්‍රේමනාත් ,නීතිඥ රියාස් සහ නීතිඥ නබීෂ් යන නීතිඥවරු පෙනී සිටින ලදී.කරුණු සැලකු අධිකරණය සැකකාර මොහොමඩ් ෆිර්දවුස් රුපියල් ලක්ෂ 5 ක ශරීර ඇප කරුවන් 2 ක් මත ඇප මත මුදාහරින ලදී.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :