ஏ.ஜி..அப்துர்ரஹ்மான் றியால் ஹாஜி, என்ற வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் ஒருவர் தனது முழுமையான நிதிப் பங்களிப்பில் முழுமையான வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய கிராமங்களை உருவாக்கி தனது நல்லெண்ணத்தைக் காட்டியுள்ள நிகழ்வொன்று பதிவாகியுள்ளது.
ஏ.ஜி..அப்துர்ரஹ்மான்.றியால் ஹாஜி, தனது முழுமையான நிதிப் பங்களிப்பின் ஊடக ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில், அப்துர் ரஹ்மான் மாவத்தையில் தனிக்கிராமத்தை உருவாக்கி, குடியேற்றப்பட்ட மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது மாத்திரம் இல்லாமல் தனது சொந்த நிதியில் பள்ளி வாயல். பொது கட்டிடங்களுக்கு காணிகள் வழங்கியது மாத்திரமின்றி 1.09.2022 அன்று மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வை பெற்றுக் கொடுக்க ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . தொழிலதிபர் றியால் ஏற்கனவே சவுக்கடி வீதியில் மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த உலகில் அப்துல் றஹ்மான் றியால் ஹாஜியார் செய்கின்ற மனிதநேய உதவிகளை போன்று ஏனைய செல்வந்தர்களும் பேராசைக்கு அடிபணியாமல் ஏழை மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.
0 comments :
Post a Comment