இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர் அணிக்கும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸாருக்கும் இடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி கிறிக்கட் போட்டியொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கல்லூரியின் பழைய மாணவருமான எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை கல்லூரி விளையாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளது.
0 comments :
Post a Comment