மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா தேசிய பாடசாலையின் 2022-2023 ஆம் வருடத்திற்கான புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும்


ஏறாவூர் சாதிக் அகமட்-
ன்று பாடசாலை அதிபர் DM. உவைஸ் அஹமட் அவர்களின் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள் அவர்களோடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் JF. றிப்கா, அதிபர்களான சக்கூர், ஜலால்தீன், ஓய்வு பெற்ற அதிபர் சயித் அஹமட், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ALM. முனீஸ், பிரதி அதிபர்களான VTM. ஜனூன், ALM. சில்மி, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 2022-2023 ஆம் ஆண்டிற்கான நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி சின்னமும் சூட்டப்பட்டது. அத்தோடு கடந்த காலங்களில் சிப்பாக கடமையாற்றிய மாணவர் தலைவர்களுக்கான நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :