மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கல்லடி விவேகானந்தா பாலர் பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு இ.கி.மிசன் ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்றது .
கல்லடி விபுலானந்த மணிமண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு வலயபிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ்ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .
இலங்கை ஸ்ரீ ராமகிருஷ்ணமிஸன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் ஆசியுரை நிகழ்த்தினார்.
உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் பாடசாலை அதிபர் திருமதி கு. பிரபாவதி பாடசாலை வரலாறு பற்றி உரையாற்றினார்.
அதிதிகள் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.
0 comments :
Post a Comment