கல்முனை பிராந்திய பாடசாலை மாணவர்களுக்கு அஸ்டோ அமைப்பினரால் விஷேடமாக திட்டமிட்டிருக்கும் ஸ்மாட் ஸ்டுடன்ட் ( SMART STUDENTS )திட்டம் பற்றி கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு அதிபர் ஏ.எம். பைஸால் தலைமையில் அண்மையில் ( 29 ) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தரம் 11 பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் ஏ.எம். றியாஸ், பாடசாலையின் ஆலோசனை வழிகாட்டல் பொறுப்பாளர் ஜனாபா ஜனூன் நௌஸாத் , ஸ்மாட் ஸ்டுடன்ட் திட்டத்தின் இணைப்பாளர்களான எம்.ஆர்.எம்.ரைய்யான், ஏ.எம்.ஜெசூலி ஆகியோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கல்வி மற்றும் உளவியல் வழிகாட்டல்கள் , தலைமத்துவ பயிற்சி முகாம்கள் ஆளுமை விருத்தியை மையப்படுத்திய செயற்திட்டங்கள் , திறமையாளர்களை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டுவருதல் , ஆத்மீக வழிகாட்டல் ,முதலுதவி பயிற்சி முகாம்கள் ,மாதந்தோறும் தபாலில் சன்மார்க்க மற்றும் அறிவியல் துணுக்குகள் , பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு பயிற்சி ,தகவல் தொழினுட்ப வழிகாட்டல்கள் , இயற்கை மருத்துவம் சார்ந்த கருத்தரங்குகள் , அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள் ,சிங்கள மற்றும் ஆங்கில மொழி விருத்தி வகுப்புக்கள் , சூம் செயலியில் மாதம் இரு முறை பல்துறை விற்பன்னர்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் ஆய்வரங்குகள் ,கற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் , நூலக சேவை என்பன இத்திட்டத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஸ்மாட் ஸ்டுடன்ட் திட்டத்தின் இணைப்பாளர் எம்.ஆர்.எம்.ரைய்யான் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment