கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவின்படி, 5 மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் ,எட்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என கல்லூரி அதிபர் வண.சகோ.சந்தியாகு தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் செல்வராஜா ரொஷியா ,லிங்கமூர்த்தி மிதுர்ஷியா ஆகியோர் மூன்று ஏ சித்திகளையும் ,கோகிலன் சஞ்சித் இரண்டு ஏ ஒரு சில சித்தியும், சந்திரகுமார் ஹிரோபிகா, திருச்செல்வம் பெரதிஷ்ரா, ஆகியோர் இரண்டு ஏபி சித்திகளையும்பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி இருக்கின்றார்கள்.
பொறியியல் துறையில் கிருஷ்ணகுமார் முகேஷ்ராம், சுரேஷ்காந்த் ஆர்னோல்ட் எரிக்ஸ்மன், தம்பி ஐயா ஹரிஷ்ராஜ் ,சண்முகநாதன் சர்வஜன் ஆகியோர் 3ஏ சித்திகளைபெற்றுள்ளனர்.
அதேபோல மோகன் கிருஷோத், அண்றிசனூன் டென்னிஸ், திருச்செல்வம் கோபுராஜ், பரமேஸ்வரன் திபுசாந் ஆகியோர் ஏ2 பி சித்திகளை பெற்று பொறியியல் துறைக்கு தேர்வாகியுள்ளனர்.
0 comments :
Post a Comment