பெற்றோல் திருட்டின்போது தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்; ஓட்டமாவடியில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 01 சீனிப்போடியார் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்தச் சம்பவம் நேற்று (5) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டு முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை திருடன் ஒருவன் திருடும் போது வெளிச்சத்தை ஏற்படுத்த சிக்கரட் லைட்டரை பயன்படுத்திய போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளதுடன், வீட்டின் கூரை மற்றும் கதவு, ஜன்னல்கலும் தீப்பற்றி எரிந்துள்ளன.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய போது அதனை திருடன் அனைப்பதற்காக தண்ணீர் என்று நினைத்து வாலி ஒன்றில் இருந்த பெயின்ட் பூசும் டின்னரை மோட்டார் சைக்கிளில் ஊற்றிய போது மோட்டார் சைக்கிள் வேகமாக தீப்பற்றியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தீப்பற்றிய போது மோட்டார் சைக்கிள் எரிகிறது எழும்புங்கள் என்று கூக்குரல் ஒன்று கேட்டவுடன் தாம் எழுந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாதக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :