சாய்ந்தமருதில் 04 அஹதியா பாடசாலைகளுக்கு காசோலை மூலமான புத்தகக் கொடுப்பனவு வழங்கி வைப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 04 அஹதியா பாடசாலைகளுக்கான காசோலை மூலமான புத்தகக் கொடுப்பனவு (Book Allowance) வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று (06) புதன்கிழமை காலை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார பிரிவின் ஏற்பாட்டில்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹானின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட 04 அஹதியா பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :