வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய புதிய அதிபர் என். சஹாப்தீனுக்கு மகத்தான வரவேற்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக இன்று (28) என். சஹாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் நிலவிய அதிபர் வெற்றிடத்திற்கே இவர் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் அதிபராக சேவையாற்றி வந்த என்.சஹாப்தீனுக்கு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன், இந்நிகழ்வின்போது பாடசாலை வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், வை.அஹமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், ஹைராத் வித்தியாலய அதிபர் யூ.எல்.அஹமட் லெப்பை மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :