ஒன்று என்னைப் பொறுத்தவரை நாங்கள் யாருமே கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக வாக்களித்ததாக நான் நம்பவில்லை. வேறொருவருடைய கருத்தை நாங்கள் கேட்கவும் இல்லை. கட்சி எடுத்த முடிவிற்கு நாங்கள் என்றும் மாறாக வாக்களிக்கவுமில்லை.
இரண்டாவதாக எங்களுக்கு ஆறரை கோடி வழங்கியது என்று சொன்னால்..
எனது குடும்பம் தேசிய கல்வியியற் கல்லூரிக்காக கொடுத்த காணி எங்களுடைய குடும்பத்தாரால் வழங்கப்படுகின்ற பொழுது ஏறக்குறைய அந்த நேரத்தில் முப்பது நாற்பது கோடி விலை மதிப்பாக இருந்தது. இன்று அதனுடைய மதிப்பு பெருகி காணப்படுகிறது.மேலும் எனக்கு பணம் தேவையென்றால் அதை விற்றிருந்தால் நான் எவ்வளவோ பணத்தை எடுத்திருக்கலாம். யோசித்துப் பாருங்கள். ஆகவே அதனை நான் விற்கவில்லை.
மேலும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ,சுப்பிரமணியம் பூங்கா என பல கொடைகளையும் எனது தந்தை செய்து இருக்கின்றார்.
அது மாத்திரமல்ல நீங்கள் கடந்த காலங்களில் பார்த்தீர்கள் என்றால் இப்படியான தேர்தல்கள், நம்பிக்கை தீர்மானங்கள் எல்லாம் வருகின்ற பொழுது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கின்ற பொழுது இப்படியான கதைகள் வருவது மிக அதிகமாக இருந்தது .
முக்கியமாக பார்த்தீர்கள் என்றால் கடந்த அரசாங்கத்திலே ரணில் விக்கிரமசிங்க பதவி விலக்கப்பட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கிய பின்பு மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை மகிந்த மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்டபோது 40 - 50 கோடி ரூபாய் கூட்டமைப்பு தலைமைக்கு கொடுக்கப்பட்டதாகவும் தமிழரசு கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டதாகவும் அது ஏனையவர்களுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை அவற்றையெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால் கொடுக்கப்பட்டதாக கதைத்திருக்கின்றார்கள். அதனுடைய உண்மைத் தன்மை அவர்களுக்கு தான் தெரியும்.
இன்றுகூட இப்படியான கதைகள் வருவதற்குரிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நலிவு படுத்துவதற்குரிய செயற்பாடுகளே. இதில் துக்ககரமான விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்களே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சேறு பூசுவதன் மூலம் அடுத்த தேர்தலில் எங்களை விட கூடுதலான விருப்பு வாக்கை பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ணுவது. இது தவறு. வாக்குகள் இல்லாது போகலாம். பல கட்சிகள் கடந்த காலத்தில் இல்லாமல் போயிருக்கின்றன. இங்கு எமது கட்சி முக்கியம். இன்று ஒரு மிகப் பலம் பொருந்திய கட்சியாக காணப்படுகின்ற இந்த கட்சியை உடைப்பதன் மூலம் அது நிச்சயமாக தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் உடைப்பதற்கான காரணமாக அமையும்.
இது சிங்கள தேசியத்திற்கு பேரினவாதிகளுக்கு உதவி செய்வதாகவே நான் பார்க்கிறேன்.
இன்னொரு விஷயம் நிச்சயமாக என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எப்பொழுதும் எவரிடமோ பணம் பெற்று நான் வேலை செய்வதில்லை.
நான் மாற்றாக ஒரு நன்மை செய்யப்போகிறேன் என்று பணம் பெற்றதுமில்லை என்னை பொறுத்தவரை நான் என்னை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.
எங்களுடைய கடந்த காலங்களை பார்க்கின்ற பொழுது யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எப்படி செயல்பட்டு இருக்கின்றோம் என்று. ஆகவே நான் சொல்ல தேவையில்லை. ஆனால் இவ்வாறான வதந்திகள் வருகின்ற பொழுது நான் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் சீன தூதுவரை ஜனாதிபதி தேர்தலிற்கு முன்பு சந்தித்தமை தொடர்பாக.
..
தூதரகங்களோடு உரையாடுவது தவறில்லை. கலந்துரையாடல் செல்லும் பொழுதும் என்னிடம் கூறவில்லை. சந்தித்த பின்பும் என்னுடன் கலந்துரையாடவில்லை ஜனாதிபதி தேர்தல் நெருங்கி இருந்த பொழுது சுமந்திரன் இரண்டு நாட்களின் முன்பு சீன தூதுவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன ஒரு தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சந்திப்பது தவறில்லை ஆனால் மர்மம் நிறைந்ததாக சந்திப்புகள் இடம்பெறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பும்.
குறித்த ஜனாதிபதி தேர்தல் மீதான வாக்கெடுப்பு காலத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஐயத்தை உண்டாக்கியுள்ளது .ஆகவே காலம் நேரத்தை கருத்திற் கொண்டு செயற்படவேண்டும்
0 comments :
Post a Comment