வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை கடந்த (22) வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
வரலாறு காணாத வகையில் இம்முறை 6000 க்கு மேற்பட்ட அடியார்கள் முதல் தடவையாக முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
முதல் தடவையாக இந்து சமய கலாசார முறைப்படி கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக காட்டுப் பாதை திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.
அன்று அதி காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார்..காலை 7 மணியளவில் குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.
அவ்வமயம் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் ,ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க , கிழக்கு கலாச்சார பணிப்பாளர் ச.நவநீதன்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இந்து சமய செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஏற்பாட்டில் கழுகுமலை பத்து பாடி
காட்டுப் பாதை திறந்துவைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே சுமார் 6000 பாதயாத்திரீகர்கள் பயணித்லமை இதுவே முதல் முறையாகும்.
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த சி.ஜெயராசா தலைமையிலான 56 நாள் மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட 6 ஆயிரம் அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.
உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு. 12 மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல் தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியது .
சுமார் 6 நாட்கள் இந்த காட்டுப் பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை. திறந்து வைக்கப்பட்ட காட்டுப்பாதை ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி மூடப்படுகிறது.கதிர்காம கொடியேற்றம் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி தீர்த்தம் இடம் பெறும் .
கதிர்காமப் பாதயாத்திரை அகத்திய முனிவர் தொடக்கி அருணகிரியார் ஈறாகவும், யோகர் சுவாமி முதற்கொண்டு சித்தானைக்குட்டி வரை எண்ணிறைந்த சித்தர் பெருமக்கள் இன்றுவரை தம் பாதக் கமலங்களை பதித்து பவனி சென்ற பாதையில் வருடாவருடம் நாமும் பயணிக்கின்றோம்.
"ஷேத்திராடனம்" எனும் நூலில் கூறப்பட்டுள்ளன.
அத்தகைய வரலாறு கூறும் பாதயாத்திரை இம் முறை இரண்டு வருடங்களுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment