மருதமுனையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் இஸ்மாலெப்பை மற்றும் ஆயிஷா உம்மா ஆகியோரது மகனாவார். தனது பாடசாலைக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை) உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்தில், மெய்யியல் விஷேட துறையிலும் பெற்றுக்கொண்டார். மேலும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணிப்பட்டத்தையும் கலாநிதிப்பட்டத்தையும் நிறைவுசெய்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 தொடக்கம் 2019 காலம் வரை சமூக விஞ்ஞானத்துறையின் தலைவராகவும் மற்றும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ள இவர் உளவியல், மெய்யியல் துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு பல தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளதுடன் தனது துறைசார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார். அத்துடன் சமூக செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள இவர், மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் (Grand Mosque) இன் தற்போதைய தலைவருமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment