மேமன்சமூக இளந்தலைமுறையுடன் அனுபவங்களை பகிரும் செயலமர்வு


லங்கை மேமன் சமூகத்தின் முதலாவது தலைமுறையினரின் அனுபங்களைப் பகிர்ந்துகொள்ளும் விஷேட செயலமர்வு அண்மையில், கொள்ளுப்பிட்டியிலுள்ள மேமன் சங்கத் தலைமையகத்தில் இடம்பெற்றது.இச்சமூகத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும்,டவர் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப் பினருமான ஹாஸிம்உமரின் தலைமையில்,நடந்த இந்நிகழ்வில், மேமன் சமூகத்தை பிரதிநிதித்துவப்ப டுத்தும் சிரேஷ்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு,மேமன் சமூக இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வகையில்,மூத்த பரம்பரையினர், இலங்கைக்கு வந்த போது நிலவிய, சூழ்நிலைகள் குறித்த அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.நிகழ்வின் சிறப்புப் பேச்சாளர்களாக ஹாஜி அன்வர் அஹமட்,ஹாஜிஅஹமட் ரஹுமான்,ஹாஜி ஏ சத்தார் அபூபக்கர்,ஹாஜி சித்தீக்அஹமட் மற்றும் ஹாஜி ஜிக்கர்காஸிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில்,சிறப்புப் பேச்சாளர்களை கௌரவிக்கும் பொருட்டு,சிறந்த வெகுமதிகளும் வழங்கப்பட்டன.ஹாஸிம்உமரிடமிருந்து பேச்சாளர்கள் வெகுமதிகளைப் பெறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :