வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் (9) ஆம் திகதி முதல் பொலித்தீன் பாவனையற்ற பாடசாலையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை சுற்றாடலை துப்புரவாக வைத்து, டெங்கற்ற சூழலை உருவாக்கும் முயற்சியில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா தெரிவித்தார்.

பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் பொலித்தீன் பொருட்களை எடுத்துவராமல் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்று மாணவிகள் உறுதிமொழி வழங்கினர்.
பாடசாலை அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :