கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடற்படை பயிற்சி முகாம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் புத்தக கல்வியோடு மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரும் நோக்கில் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்யும் வகையில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற் பயிற்சி பாசறையொன்று அண்மையில் ( 12 )கல்லூரி திறந்தவெளியரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ரன்தம்பே தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ள விசேட கடற்படை பயிற்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வகையில் மாணவர்களுக்கான முன் ஆயத்த பயிற்சிகளை வழங்கும் வகையில் கல்லூரியின் கடற்படை பொறுப்பாசிரியர் பெலடூன் கொமாண்டர் மேஜர் கே.எம்.தமீம் அவர்களின் கண்காணிப்பின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சிகளும் அனுபவ ரீதியிலான பகிர்வும் இடம்பெற்றன..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :